the romans road



ரோமரின் இரட்சிப்பு பாதை என்றால் என்ன?

ரோமரின் இரட்சிப்பு பாதை என்றால் ரோமரின் புஸ்தகத்திலிருந்து இரட்சிப்பின் பாதைக்கு நடத்துகிறதான வசனங்களை கொண்டு சுவிசேஷம் அறிவித்தல். இது ஓர் எளிய வழி ஆனால் தேவன் எப்படி இரட்சிப்பை அருளினார். நமக்கு ஏன் இரட்சிப்பு வேண்டும் நாம் எப்படி இரட்சிப்பை பெற்றுக்கொள்ள முடியும். அதனால் வரும் பலன் என்ன என்று போதிக்கின்றதான வல்லமையான வழி.

ரோமரின் இரட்சிப்பு பாதையில் முதல் வசனம் (ரோ 3:23) "நாம் எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமையறற்றவர்களானோம்" ஒருவரும் பேதைகளல்ல. தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்தோம் (ரோமர் 3:10-18) வரையுள்ள வசனங்கள் நம் வாழ்க்கையின் பாவகாரியங்களை படம் பிடித்து காட்டுகின்றதாயிருக்கிறது. இரண்டாவது வசனம் (ரோமர் 6:23) பாவத்தினால் வரும் பலனை போதிக்கிறது பாவத்தினால் நாம் சம்பாதித்தது மரணம்.

சரிரபிரகாரமான மரணம் மாத்திரம் அல்ல கிருபை வரமோ நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காய் மரித்ததினால் தேவன் நம் மேல் வைதத அன்பை தெரியப் பண்ணினார். கிறிஸ்து நமக்கு நித்திய ஜீவன் அருளும் பொருட்டு பாவமில்லாத அவர் பாவமானார்.

நான்காவது (ரோமர் 10:9) கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினால் அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் "நமக்காய் அவர் மரித்தார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது நாம் இரட்சிக்கப்படுவோம் (ரோ 10:13) சொல்கிறது "கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்கிற எவனும் இரட்சிக்கபடுவான்" நித்திய மரணத்தின்று நம்மை மீட்ட இயேசுவினை சொந்த இரட்சகராக ஏற்று கொண்டு அவரிடம் வந்தால் நிச்சயம் அவர் பாவமன்னிப்பு அளித்து நித்திய வாழ்வை தருவார். இறுதியாக (ரோ 5:1)ம் வசனம் "இவ்விதமாக நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்". ரோ 8:1 சொல்கிறது. "கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கு ஆக்கினையில்லை" கிறிஸ்து நமக்காய் நம்முடைய பாவங்களுக்காய் மரித்ததினாலே நாம் ஆக்கினை அடையமாட்டோம். இறுதியாக தேவன் நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்த வசனத்தை பார்போம் ரோ8:38-39 "மரணமானாலும் ஜீவனானாலும். கர்த்தராகிய இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மை பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.

நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புவீர்களானால், உங்களுக்காக ஒரு மாதிரி ஜெபம் இங்கு தரப்பட்டிருக்கிறது. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே.

"தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"






AMAZING GRACE BIBLE INSTITUTE